உன்னுடன் விழித்திருந்த இரவுகள் சென்று இங்கே உனக்காக விழித்திருக்கும் இரவுகளே எஞ்சியிருக்கின்றன
Monday, 11 November 2013
மண்ணோடு மடிந்துவிட்டாலென்ன தினமும் உன் நினைவுகள்முன் மண்டியிடுவதற்கு, காற்றோடு கலந்துவிட்டலென்ன இராவுகளில் என் கனவிலும் கண்ணீர் வடிப்பதற்கு,
உன் கண்ணீர் துடைத்திட ஆளின்றி மண்ணைத்தொடுமெனில் அது நான் மண்ணுள் புதைந்த பின்னர்தான் நிகழும்
ஒவ்வொரு நொடியும் உன்னை புதிது புதிதாய் காதலிக்கிறேன் ஒவ்வொரு காதலிலும் உன்னை புதிது புதிதாய் உணர்கிறேன் ஒவ்வொரு முறை உணரும்போதும் நான் இன்னும் புதிதாகவே..காதலிக்கிறேன்...
பேருந்தில் முன் இருக்கையில் நீ காற்று உன் மல்லிகை மணத்தோடு உன் மனதையும் அடித்து வரட்டும்.
என் வாழ்வின் அர்த்தமாய் நீயிருப்பாயென நினைத்தேன் ஆனால் , வெறும் நினைவுகள் மட்டும் தந்து என் வாழ்வை முடித்துவிட்டுச் சென்றாய்
கண்விழிக்கும் போதும் கண்ணுறங்கும் போதும் கன்னியுன் முகம் காணத்துடிக்குதடி காணாமல் கண்ணீர் வடிக்குதடி