Monday, 11 November 2013

திட்டித்தீர்த்து சென்றுவிடுகிறாய் ,
"கோவத்தில் உன் கன்னம் இன்னும் 
சிவக்கிறதடி '' என குறுந்தகவல் அனுப்பினேன் 
" நீயெல்லாம் திருந்தவேமாட்டடா " உன்னிடமிருந்து 
"ஆமாம் " என்னிடமிருந்து 
"ரொம்ப கோவமா இருக்கேன்" உன்னிடமிருந்து 
" நான் ரொம்ப பாவமா இருக்கேன் " என்னிடமிருந்து 
உடனே ஒலித்தது என் கைபேசி 
உன் பெயர் தாங்கி...
" லூசு " உன்குரல் 
கேட்டதும் கனிந்தது காதல்.. 

No comments:

Post a Comment